Tuesday 24 April 2018

37. வண்ணப் பாடல் - 10 - திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)

ராகம் - அம்ருதவர்ஷினி
தாளம் - சதுஸ்ர ஏகம்


சந்தக் குழிப்பு:
தனனந் தனனந் தனதான

குளிரும் புனலஞ் சடைமேலே
..குலவும் பதி!உன் றனைநாட
எளியன் படும்வெந் துயர்தீரும்
..இனிதென் றுமெயென் றனைநாடும் 
வளமும் புகழுந் தருவோனே
..வளைமங் கையுடன் புணர்வோனே
முளையிந் துவணிந் திடுவோனே 
..முதுகுன்(று) அமரும் பெருமானே

இனிதென் றுமெயென் றனைநாடும் - 
இனிது என்றுமெ என்றனை நாடும்

முளையிந் துவணிந் திடுவோனே -
முளை இந்து அணிந்திடுவோனே

முளை இந்து - வளர் பிறை.

பாடலைக் கேட்க:


No comments:

Post a Comment