Tuesday 6 February 2018

29. வண்ணப் பாடல் - 08 - திருமீயச்சூர்

ராகம்: சுருட்டி
தாளம்: மிஸ்ர சாபு (எடுப்பு அரையிடம் தள்ளி)

தானத் தானன தந்ததான

பாதத் தாமரை என்றும்நாடிப்
..பாசத் தோடெழு மன்பர்மீது
சீதத் தேமல ரங்கையாலே
..சேமத் தோடுயர் வன்பொடீவாய்
நாதத் தாதிய கண்டசோதி
..நாகத் தாரணி சுந்தரேசா
வேதத் தோடிசை யுஞ்சுசீலா
..மீயச் சூருறை தம்பிரானே

பதம் பிரித்த வடிவம்:

பாதத் தாமரை என்றும் நாடிப்
..பாசத்தோ(டு) எழும் அன்பர்மீது
சீதத் தேமலர் அங்கையாலே
..சேமத்தோ(டு) உயர்(வு) அன்பொ(டு) ஈவாய்
நாதத்(து) ஆதி அகண்டசோதி
..நாகத்தார் அணி சுந்தரேசா
வேதத்தோ(டு) இசையும் சுசீலா
..மீயச்சூர் உறை தம்பிரானே

பாதத்தாமரை - இறைவனின் பாதம் ஆகிய தாமரையை

எழுதல் - தொழுதல்

சீதத் தேமலர் அங்கை - குளிர்ந்த தேன் நிறைந்த மலர் போன்ற அழகிய கை

சேமத் தோடுயர் வன்பொடீவாய் - சேமத்தோடு உயர்வு அன்பொடு ஈவாய்

சேமம் - வளம் (prosperity)
உயர்வு - சிறப்பு / புகழ் (fame)

நாகத் தார் - நாக மாலை (நாகங்களை மாலையாக அணிதல்)

பாடலைக் கேட்க:
https://drive.google.com/open?id=0By387kvntVlPSjRWU2NoQ3VXLTA

No comments:

Post a Comment