Sunday 11 June 2023

78. காஞ்சி காமாக்ஷி

காஞ்சிபுரம் - காமாக்ஷி அம்மன்

வண்ணப் பாடல்

ஓங்கும் ஐம்புலனோட - எட்டிக்குடி (காஞ்சிரங்குடி) திருப்புகழ் சந்தம்


தாந்த தந்தன தான தனத்தம் தனதான


மீண்டு மம்புவி மீதி லநர்த்தன் பிறவாமல்

..மேம்ப டும்பழ தீவி னைகட்டுண் டலையாமல்


மாண்ட ருங்கன தாளை நினைக்குங் குணமோடு

..வான்பு கழ்ந்திடு வாழ்வு மளித்தென் றனையாள்வாய்


தாண்ட வம்புரி நாத ரிடப்பங் கினிலாரும்

..சாந்த மும்பெரு வார முடைச்சங் கரிவாமி


காண்ட வன்பரி வார மனைத்தும் பணிதாயே

..காஞ்சி யம்பதி மாவ டியத்தன் குழைமாதே


பதம் பிரித்த வடிவம்:


மீண்டும் அம்புவி மீதில் அநர்த்தன் பிறவாமல்

..மேம்படும் பழ தீவினைகட்டுண்(டு) அலையாமல்

மாண் தரும் கன தாளை நினைக்கும் குணமோடு

..வான் புகழ்ந்திடு வாழ்வும் அளித்து என்றனை ஆள்வாய்

தாண்டவம் புரி நாதர் இடப்பங்கினில் ஆரும்

..சாந்தமும் பெரு வாரம் உடைச் சங்கரி வாமி

காண்டவன் பரிவாரம் அனைத்தும் பணி தாயே

..காஞ்சி அம் பதி மாவடி அத்தன் குழைமாதே


காண்டவன் - இந்திரன்


காஞ்சி அம் பதி மாவடி அத்தன் குழைமாதே - காஞ்சியில் மா மரத்தின் அடியில் அம்பாள் லிங்கம் அமைத்துப் பூஜை செய்து கொண்டிருக்கையில், சிவபெருமான், அன்னையைச் சோதிக்கும் பொருட்டு, வெள்ளப்பெருக்கை உண்டாக்கினார். சிவபெருமானுக்கு அதனால் ஆபத்து வந்துவிடப்போகிறது என்று பதறி, அந்த மணலால் ஆன லிங்கத் திருமேனியை அணைத்துக்கொண்டாள். 

குழையத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கை வல்லி என்று அபிராமி பட்டர் பாடுகிறார். அன்னையும் குழைய, அத்தனும் குழைந்து தன்னோடு சேர்த்துக் கொண்டார்.



No comments:

Post a Comment