1. தில்லை
அம்பலமே நம்பலமென் றங்கையால் ஏத்திடுவார்
தம்பயம் போக்கும் தயாபரன் - செம்பொன்னார்
மன்றுள் நடமாடும் மன்னன் திருவடி
என்றும் உளதே எமக்கு
தம்பயம் போக்கும் தயாபரன் - செம்பொன்னார்
மன்றுள் நடமாடும் மன்னன் திருவடி
என்றும் உளதே எமக்கு
பதப்பிரிவு:
அம்பலமே நம்பலம் என்று அம் கையால் ஏத்திடுவார்
தம் பயம் போக்கும் தயாபரன் - செம்பொன் ஆர்
மன்றுள் நடமாடும் மன்னன் திருவடி
என்றும் உளதே எமக்கு
2. திருமயிலை
மந்தை வெளியில் மனமலைந்தால் என்றனக்குச்
சிந்தை கவலை சிறிதுமிலை - எந்தை
உறையும் எழில்மயிலை உண்டருகில் சென்று
நிறைவாய்த் தரிசிப்போம் நின்று
பதப்பிரிவு:
மந்தைவெளியில் மனம் அலைந்தால் என்றனக்குச்
சிந்தை கவலை சிறிதும் இலை - எந்தை
உறையும் எழில்மயிலை உண்டு அருகில்; சென்று
நிறைவாய்த் தரிசிப்போம் நின்று
No comments:
Post a Comment