Friday 27 April 2018

38. வண்ணப் பாடல் - 11 - திருவண்ணாமலை

ராகம்: சங்கராபரணம் 
தாளம்: ஆதி

சந்தக் குழிப்பு:

தனதனன தான தனதனன தான
.தனதனன தான தனதான

இமகிரிகு மாரி யொடுநடனம் ஆடும்
.இனியவ!வி சால குணநேயா!

..இளமதியும் ஆறும் எழிலுடனு லாவும்
...இருசடைவி னோத! அழகோனே!

கமலமல ரானும் அரியுமறி யாத
.கடைமுதலி லாத அழலோனே!

..கரியினுரி பூணும் மறவ!விடை யேறி!
...கடையனெனை ஆள வரவேணும்

நமலுமொரு பாலன் நலமொளிற வாழ
.நமனையுதை கால! அயிலோனே!

..நரலையுமிழ் ஆலம் அதைநுகரும் ஈச!
...நமசிவய ஓத அருள்வோனே!

அமரவுல கோரும் அனுதினமும் ஆரும்
.அமலகுரு நாத! பெரியோனே!

..அரவுதலை மாலை அணியுமதி தீர!
...அருணகிரி மேவு பெருமானே!

நமலுதல் - வணங்குதல்
நமலும் ஒரு பாலன் - மார்க்கண்டேயன்
ஒளிறுதல் - விளங்குதல்
நலம் ஒளிற வாழ - நலம் விளங்க வாழ
ஆர்தல் - அனுபவித்தல்



No comments:

Post a Comment