Friday 8 February 2019

52. சித்திரக்கவி - 1

நரமுக விநாயகர் - நன்றுடையான் கோயில், திருச்சி.

நாளை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று உங்களுடன் பகிர்கிறேன். சந்தவசந்தம் என்ற இணையக்குழுமத்தில் நடந்த சித்திரக்கவியரங்கில், அடியேன், விநாயகரின் அருளால் எழுதியது.

அஷ்ட நாக பந்தம்

வெண்பா:

நரமுகவி நாயக ஞால முதலே
கருணா முதமே கணாதிப தீர
கவலையவம் தீது களைவோய்நா தாதி
பவதாக மரிமகி பா

பதம் பிரித்த வடிவம்

நரமுக விநாயக ஞால முதலே
கருணாமுதமே கணாதிப தீர
கவலை அவம் தீது களைவோய் நாதாதி
பவ தாகம் அரி மகிபா

கருணாமுதமே - கருணா அமுதமே - கருணை பொழியும் அமுதம்
நாதாதி - நாதத்தின் ஆதி (ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்டம்)
அவம் - கீழ்மை
பவதாகம் - பிறவிப் பிணி
அரி - அழிப்பாய்
மகிபா - மகிமை மிக்கவனே.

படத்தில் எட்டு வண்ணத்தில் பாம்புகள் உள்ளன. ஒவ்வொரு வண்ணப் பாம்பிலும் இதே வரிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படும்.



சரண்யா

No comments:

Post a Comment